சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் சகோதரி கைது

மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற நந்தினியின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்
சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் சகோதரி கைது
x
மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற நந்தினியின் சகோதரியை போலீசார் கைது செய்தனர். பூரண மதுவிலக்கு வேண்டி முன்னாள் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவருடைய தந்தை இருவரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தின் நடவடிக்கையை கண்டித்து நந்தினியின் சகோதரியான நிரஞ்சனா மதுரை சட்டக்கல்லூரி முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றார். இதையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்