டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து புடவை திருடும் கும்பல்...

டெல்லியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து துணிக்கடையில் விலை உயர்ந்த பட்டுபுடவைகளை திருடும், நான்கு பெண்கள் உட்பட 6 வட மாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து புடவை திருடும் கும்பல்...
x
சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக்கடையில் ,  பட்டு புடவைகளை திருடிய 4 பெண்களை கடை ஊழியர்கள் பிடித்து பாண்டி பஜார் போலீசாரிடம் ஓப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. டெல்லியில் இருந்து காரில் வந்தத 6 பேர் கொண்ட கும்பல் ,இது போன்று பல பிரபலமான கடைகளில் விலை உயர்ந்த பட்டுபுடவைகளை திருடியது தெரியவந்தது.  இதனையடுத்து 4 பெண்கள் உட்பட 6  வடமாநிலத்தவரையும் கைது செய்த போலீசார் அந்த கும்பலிடம் இருந்து விலை உயர்ந்த பட்டுபுடவைகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்