தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின் உறுதி
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழக வரலாற்றில்  ஒரு கருப்பு அத்தியாயம் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில்  உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு  இன்னும் உரிய நீதி கிடைக்கவில்லை  என தெரிவித்துள்ளார். உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையை கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திமுக ஆட்சி அமைந்தவுடன்  எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்