10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது
x
காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வைரவபுரத்தில் கூலி வேலை செய்யும் தாய், தந்தையுடன் வசித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவி நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும் மானகிரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் மேலாளரான 55 வயது ரவிச்சந்திரன், சிறுமியின் கையைப்பிடித்து அவரது வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, அவரை தள்ளிவிட்டு தப்பியுள்ளார். பக்கத்தில் உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை அழுதுகொண்டே அவர்களிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்த பகுதிவாசிகள், வங்கி மேலாளரை ரவிச்சந்திரனை நையப்புடைத்து, பின்னர் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மாணவி கொடுத்த புகாரின் பேரில் ரவிசந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்