வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்

ஒசூரில் குழாய் அருகில் வரிசையாக காலி குடங்களை வைத்து, குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
x
வடகிழக்கு பருவமழை தமிழகத்தை கைவிட்டதன் எதிரொலியாக, மாநிலத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. தளி வட்டத்திற்கு உட்பட்ட கலுகொண்டப்பள்ளி கிராமத்திலும், இதே நிலை தான். தண்ணீர் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி குடங்கள் வரிசைகட்டி வைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றதால், ஆழ்துளை கிணறு அமைத்தும் பயனில்லை என வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பஞ்சாயத்து நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்