குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
x
திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் கானம்குளம், துளுக்கன்குளம், நல்லூர்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தென்கால் வழியாக தண்ணீர் வருகின்றன. கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படாததால் தண்ணீர் நீர்நிலைக்கு வருவதில்லை. இந்நிலையில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் அதிகளவு இல்லாததால் மக்கள் குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் மழைக்காலம் வரும் முன், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கால்வாய்களை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தென்பகுதிக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்