பொன்னமராவதி மோதல் : 49 கிராமங்களில் நீடிக்கும் 144 தடை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்பட பதற்றமான சில இடங்களுக்கு நகரப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
x
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்பட பதற்றமான சில இடங்களுக்கு நகரப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. அப்போது, பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்கியதோடு, பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பொன்னமராவதி, வடகாடு, ஆலங்குடி ஆகிய பதற்றமான இடங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு மட்டும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டமின்றி பேருந்துநிலையம் வெறிச்சோடி கிடந்தது. பிரச்சனை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்