"அதிகாரிகள் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது" - திருமாவளவன்

தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
x
சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான திருமாவளவன், அம்பேத்கரின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓமக்குளம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குகளை விலை பேசுவோருக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்