"பொய் பிரசாரம் செய்வது திமுகவின் பாணி" - ராமதாஸ்

பொய் பிரசாரம் செய்வதே திமுகவின் பாணி என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
x
பொய் பிரசாரம் செய்வதே திமுகவின் பாணி என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சேலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், நல்ல திட்டங்கள் அனைத்தையும் நாங்கள் தான் செய்தோம் என திமுகவினர் கூறி வருவது, அறுவறுக்கத்தக்கது என்றார். மக்கள் நம்பும் விதமாக பொய் பிரசாரம் செய்வதே, திமுகவின் பாணி என்று கேள்​வி ஒன்றிற்கு பதிலளித்த போது, ராமதாஸ் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்