பாலியல் வன்கொடுமை சம்பவம்: "அரசு வருத்தம் கூட சொல்லவில்லை" - கமல்ஹாசன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட உள்ள மகேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல் பிரச்சாரம் செய்தார். சூலூர் பகுதியில் அவர் பேசிய போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். பொள்ளாச்சி பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அ.தி.மு.க. அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்