அப்பள வியாபாரி வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை

திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் அப்பள வியாபாரி சேகர் வீட்டில்70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
அப்பள வியாபாரி வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை
x
வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், இரும்பு லாக்கரை திருடிச் சென்று விட்டதாகவும்,  17 லட்சம் மதிப்பிலான 70 சவரன் தங்க நகைகள்,  வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்ததாகவும் புகாரில் சேகர் கூறியுள்ளார்.  இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரிடம், வீட்டில் இருப்பவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பதால்,  கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா? அல்லது நாடகமாடுகிறார்களா? என்று தெரியவில்லை என தெரிவித்ததுடன், அப்பள கம்பெனியில் வேலை பார்ப்பவர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  படுக்கை அறைக்குள் இருக்கும் பீரோவில் 17 சவரண் தங்க நகை மற்றும் 2  லட்சம் ரொக்கம் அப்படியே உள்ள நிலையில், லாக்கரை மட்டும் கொள்ளை அடித்தது எப்படி என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்