பொள்ளாச்சி பாலியல் வழக்கு - ஸ்டாலின் கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - ஸ்டாலின் கோரிக்கை
x
தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர நிகழ்வை திசை திருப்பும் போலியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வை கண்டித்து போராடுபவர்கள் மீது வன்முறையை ஏவுவது  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விரைவு நீதிமன்ற விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்தி, பாலியல் வன்கொடூர நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்