அட்டை ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து : 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அட்டை ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
அட்டை ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து : 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு
x
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அட்டை ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. பரமத்தி வேலூரில் இருந்து அட்டையை ஏற்றிக்கொண்டு விஜயவாடா நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தாசநாயக்கன்பட்டி அருகே சென்ற போது, லாரி திடீரென தீ பிடித்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ வேகமாக பரவியது. இதனிடையே ஜேசிபி இயந்திரத்தின்  உதவியுடன் லாரியில் உள்ள அட்டைப் பெட்டிகள் அகற்றப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்