சேலத்தில் வாகன சோதனையில் பணம் பறிமுதல்

சேலத்தில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாததால் 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலத்தில் வாகன சோதனையில் பணம் பறிமுதல்
x
சேலம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சண்முகம் என்பவரின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது காரில் இருந்து 3 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு  மாவட்ட ஆட்சியர் ரோகிணி, காரின் உரிமையாளருக்கு அறிவுறுத்தினார். இதேபோல வீரபாண்டியில் நடந்த வாகன தணிக்கையில் அழகாபுரத்தை சேர்ந்த சேகர் என்பவருடைய காரில் இருந்து 73 ஆயிரத்து 300 ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர். .


Next Story

மேலும் செய்திகள்