தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...

பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.
x
புதுக்கோட்டை மாவட்டம், பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர், தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர். பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடி, இறக்கப்படாமல் இருந்ததை கண்ட பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.  அப்போது தலைமை ஆசிரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்