கொடநாடு வழக்கு- மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கொடநாடு வழக்கு- மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
கொடநாடு தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகாத குற்றவாளி மனோஜ் சமிக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.  

அதேபோல் கோவையில் கைது செய்யப்பட்ட பிஜின் குட்டி மற்றும் திபு ஆகியோருக்கு நீதிமன்ற காவலை நீட்டிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சயான் மற்றும் வாளையார் மனோஜ் தலைமறைவாக உள்ள நிலையில் வழக்கு விசாரணை மார்ச் 4ம் தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்தார்.

விசாரணைக்காக, ஜம்சீர் அலி, சதீஷ், உதயன், சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய் ஆகியோரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிஜின் குட்டி, திபு ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்