விராலிமலை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி மற்றும் விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
விராலிமலை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு
x
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி மற்றும்  விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் அரசாணை வெளியிடப்பட்டு நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு  இன்று தச்சன்குறிச்சியில் நடப்பதாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். வரும் 20 ஆம் தேதி நடக்க உள்ள விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க  இதுவரை 2 ஆயிரம் காளைகள் மற்றும் 800 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்