கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...

ராசிபுரம் அருகே, கோவில் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பொன்பரப்பிபட்டியைச் சேர்ந்தவர் ரத்தினம். 25 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இவர்களது குடும்பம், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. இவர்களிடம் யாரும் பேசக் கூடாது எனவும், கோவில் திருவிழா உள்ளிட்ட ஊர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலை, இன்றளவும் தொடர்வதால், ஊரை விட்டு வெளியே வந்த அவர்கள் அங்குள்ள மலைப் பகுதியில், முறையான வீடு இல்லாமல், திறந்த வெளியில், சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால், ரத்தினத்தின் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். ரத்தினத்தின் மகன் லோகேஷ், அங்குள்ள கல்லூரி ஒன்றில், டிப்ளமோ படித்து வரும் நிலையில், தமது குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவல்,  சக மாணவர்களுக்கு தெரிந்தததால், மன உளைச்சலில், கடந்த ஒரு மாதமாக அவர் கல்லூரிக்கு போகவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்