பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
x
சட்டப்பேரவையில்  கவன ஈர்ப்பு தீர்மானத்தில் போது பேசிய தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, பசுமை பட்டாசு குறித்து தெளிவுபடுத்தும் வரை, தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பட்டாசு தொழில் நலனை பாதுகாக்கும் வகையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டை போல், பட்டாசு தொழில் பிரச்சினைக்கும்,சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்