புயல் பாதிப்பு- முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையான கணக்கெடுப்பு பணிகளை நடத்தவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையாக கணக்கெடுப்ப பணி நடத்தப்படவில்லை என்றும், தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் தாக்கிய பின்னர் கிராம நிர்வாக அலுவலர்கள் சில நாட்கள் நடத்திய போராட்டத்தாலும், கணக்கெடுப்பு பணிவில் தொய்வு ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
Next Story