கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்

தஞ்சாவூர் அருகே மாணவர்கள் திரட்டிய நிதியில் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
x
கஜா புயல் தாக்கி 40 நாட்களுக்கு மேலாகியும், அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அதிராம்பட்டி அடுத்த கீழ்தோட்டம் கிராமமக்கள் பரிதவிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் இணைந்து நிதி திரட்டினர். அந்த நிதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களே, அவர்களது வீடுகளை கட்டி வருகின்றனர். உரிய காலத்தில் மனிதாபிமானத்துடன், மாணவர்கள் செய்த உதவி, உலகத்தைவிட மிகப் பெரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்