கஜா புயல் பாதிப்பிற்கு கேட்ட தொகை தரவில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு குற்றச்சாட்டு

கஜா புயல் பாதிப்புகளை சீர்செய்ய மத்திய அரசிடம், பேரிடர் நிதி இருந்த போதும், வழங்க மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பிற்கு கேட்ட தொகை தரவில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு குற்றச்சாட்டு
x
* கஜா புயல் பாதிப்புகளை சீர்செய்ய மத்திய அரசிடம்,  பேரிடர் நிதி இருந்த போதும், வழங்க மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

* கஜா புயல் பாதிப்புக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம் புலியூரை சேர்ந்த செல்வராசு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், திருச்சியைச் சேர்ந்த தங்கவேல் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். 

* இந்த மனுக்கள்  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.   தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு தொகை இருந்தும், கஜா புயல் நிவாரணங்களுக்காக உரிய தொகையை வழங்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.  

* மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கை அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும் என்பதால், அதற்கான விளக்கங்கள் கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.

* இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விவரங்கள் போதுமானவையாக உள்ளதா? எப்போது முடிவெடுக்கப்படும்? என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டதுடன்,  வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்