பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு
x
* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த அக்டோபர் மாதம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

* பெட்ரோல் விலை 85 ரூபாயையும் தாண்டியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
 
* இதனிடையே, கடந்த 57 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்து வந்ததால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.

* ஆனால், இன்று பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 94 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 12 காசுகள் அதிகம்.

* எனினும், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று போலவே, இன்றும் 68 ரூபாய் 28 காசுகளுக்கு டீசல் விற்பனையாகிறது.

* ஐந்து மாநில தேர்தல் முடிவு எதிரொலியாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்