நாகை,காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

கஜா புயலில் பாதிக்கப்பட்ட நாகை, மற்றும் காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
கஜா புயலில் பாதிக்கப்பட்ட நாகை, மற்றும் காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு அறிவித்த நிவாரண தொகை போதுமானதாக இல்லை என கூறிய 64 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஒன்று கூடி, வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். விசைப்படகுகளுக்கு, 60 லட்ச ரூபாயும், நாட்டுப்படகுகளுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும் வரை, கடலுக்கு மீன்பிடிக்க செல்ல போவதில்லை என, நாகை, காரைக்கால் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்