தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர்,தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
x
கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் பேரிடர் ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட அதிகாரிகளை மத்திய குழுவினர் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர்,  குழு, குழுவாக பிரிந்து கார் மூலம், புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்