மீண்டும் கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விசைபடகுகளின் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீண்டும் கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள்
x
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விசைபடகுகளின் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கஜா புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட விசைபடகுகள் இன்று கடலுக்கு சென்றன. இதேபோல் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி நாட்டுபடகு மீனவர்களும் கடலுக்கு சென்றனர். இதனிடையே கடலுக்கு சென்றுள்ள பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்