புயல் சேதங்களை பார்வையிட தம்பிதுரை வரவில்லை - பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்
புயல் சேதங்களை பார்வையிட தம்பிதுரை வரவில்லை - பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
மணப்பாறை அருகேயுள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி அப்பகுதி மக்கள், மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். கஜா புயலால், தங்களது கிராமங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை துணை சபாநாயகர் பார்வையிடாதது வருத்தம் அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்