புயல் சேதங்களை பார்வையிட தம்பிதுரை வரவில்லை - பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்
மணப்பாறை அருகேயுள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி அப்பகுதி மக்கள், மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். கஜா புயலால், தங்களது கிராமங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை துணை சபாநாயகர் பார்வையிடாதது வருத்தம் அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story