ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ராமநாதசுவாமி கோவிலின் முதல் பிரகாரத்தில் 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
ராமேஸ்வரம் பகுதிகளில் கனமழை : கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழைநீர்
x
ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்கள் நிரம்பி கழிவுநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் முதல் பிரகாரத்தில் 1 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பலத்த மழையின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்