12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - லிப்ட் ஆபரேட்டர், காவலாளி என 24 பேரால் நேர்ந்த கொடூரம்

சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த 18 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 வயது சிறுமிக்கு  பாலியல் வன்கொடுமை - லிப்ட் ஆபரேட்டர், காவலாளி என 24 பேரால் நேர்ந்த கொடூரம்
x
சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்..

இவர்களின் இரண்டாவது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் மற்ற மாணவிகளை போல அல்லாமல் சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.  


இந்த நிலையில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த மூத்த மகள், தனது தங்கையுடன் பேசும் போது அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது... 

அவர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர்கள், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், தண்ணீர்கேன் போடுபவர் என 24 பேர் கொண்ட கும்பல் சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளனர். 

அந்த சிறுமியால் எதையும் கூற முடியாது என்பதை தெரிந்து கொண்டே அந்த கும்பல் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் சிறுமிக்கு போதை ஊசி போட்டும், கத்தி முனையில் மிரட்டியும் அந்த கும்பல் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்த சிறுமி  சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.... 


சிறுமியை பாலியல் வன்முறை செய்யும் காட்சிகளை எல்லாம் செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொண்டும் அவரை மிரட்டி பணிய வைத்துள்ளது அந்த கும்பல்... தனக்கு நன்றாக அறிமுகமான நபர்களாலேயே அந்த சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருப்பது தான் இந்த சம்பவத்தின் சோகம்... 

இது தொடர்பாக அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து,  24 பேரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

அவர்களில் பிளம்பர், எலக்டீரிஷன், குடியிருப்பு காவலாளி உள்பட 18 பேர்
மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார்,
அவர்களை கைது செய்துள்ளனர்.

 
பெண் குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்க்க வேண்டும் என்பதை பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது இந்த கொடூர சம்பவம்.... 


Next Story

மேலும் செய்திகள்