அதிகாரியை கேள்வி கேட்டு வறுத்தெடுத்த விவசாயி...
மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - கோட்டாட்சியர் சமாதானத்தை ஏற்க மறுப்பு
11 July 2018 10:47 AM GMT
அதிகாரியை வறுத்தெடுத்த விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த ஆத்துப்பட்டியில் முறைகேடாக மணல் கடத்தி செல்வதாகக் கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில லாரிகளின் கண்ணாடிகளை மக்கள் அடித்து உடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கோட்டாட்சியர் ஜெயபாரதியின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது விவசாயி ராஜகோபால் என்பவர், அதிகாரியை கேள்வி கேட்டு வறுத்தெடுத்தார்.
Next Story