"முன் ஜாமின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா?" - பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

முன்ஜாமின் பெற அவகாசம் கோரிய மனு 17-க்கு தள்ளிவைப்பு
முன் ஜாமின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா? - பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
x
சென்னையில் ஜனவரி 18-ல் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இந்து கடவுளை விமர்சித்து பேசியதாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில் முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பாரதிராஜா தாக்கல் செய்த மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இயக்குனர் பாரதிராஜாவால் செல்ல முடியும் போது,  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.  கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனுவாக பாரதிராஜா மனுதாக்கல் செய்ததும் தவறு என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பாரதிராஜாவின் மனுவுக்கு நாராயணன் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 17-க்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்