"இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்" - கிரண்பேடி கருத்து

இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார்.
இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும் - கிரண்பேடி கருத்து
x
இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சி இளைஞர்களுக்கு முன்னுரிமை  அளிப்பதால், இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடையும் என்றார். ஒவ்வொருவரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனி தனி வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதாகவும் கூறினார். தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் மீண்டும் அமர உள்ள பிரதமர் மோடிக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கிரண்பேடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்