தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்
மக்கள் மீதுள்ள நம்பிக்கையே தனித்து போட்டியிடக் காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீதுள்ள நம்பிக்கை தான் தனித்து போட்டியிட காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய சீமான், திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையில் உள்ளதாகவும், ஆனால் நாம் தமிழர் கட்சி மக்களை நம்புவதால் யாரோடும் கூட்டணி வைப்பதில்லை என்று குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலோடு நான்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தி இருக்க வேண்டும் என்றும், ஆட்சிக்கு ஆபத்து என்பதால் தான் தேர்தலை நடத்த அச்சப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
Next Story