"பிரதமர் மோடி, ராகுல் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, ராகுல் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள பார்மரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோல, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக பேசியதாக பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து ஆய்வு மேற்கொண்ட தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியும் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசவில்லை என தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்