ஆதாரங்களின் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்கள் மீது புகார் - அமைச்சர் ஜெயக்குமார்

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஆடியோ, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், ஆட்டோ ஓட்டுனர்களுடன், அமைச்சர் ஜெயக்குமார், மே தினம் கொண்டாடினார். அண்ணா தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட புதிய ஸ்டாண்டை திறந்து வைத்த அமைச்சர் ஜெயக்குமார், தொழிலாளர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஆடியோ, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளோம், எம்எல்ஏக்கள் 3 பேரும் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார், இது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஸ்டாலின் மீண்டும், சட்டையை கிழித்துக்கொள்ள தயாராகி விட்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்