ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா...

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.
x
திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், ஆணைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளதாகவும் பிரேமலதா கூறினார். பிரதமர் வேட்பாளர்கள் மோடி மற்றும் ராகுல் காந்தி என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என கூறிய அவர், ஜெயலலிதா பாணியில், 'இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்களா? வெற்றி பெற செய்வீர்களா? என தொண்டர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்