"பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு போய்விட்டது" - அ.தி.மு.க. அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

"எப்போதுமே தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாடு தான்"
x
தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை அகற்ற, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வாக்காளர்களுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.வட மற்றும் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் கலாநிதி வீராசாமி,  தயாநிதி மாறன் மற்றும்  பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். தமிழகத்திற்கு வந்த பல தொழிற்சாலைகள், அ.தி.மு.க. அரசின் நடவடிக்கையால் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டதாக குற்றம் சாட்டினார். மேகதாது தொடங்கி ஸ்டெர்லைட் வரை தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டையை மத்திய பா.ஜ.க அரசு எடுத்து வந்துள்ளதாகவும் வைகோ புகார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்