காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.
x
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க.  வேட்பாளர் இளங்கோவன், தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டால் திருச்சி புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள் பயன்பெறக்கூடிய காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை இரண்டு ஆண்டிற்குள் செயல்படுத்துவேன் என உறுதியளித்தார். அவ்வாறு இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றால் இரண்டு ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் இளங்கோவன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்