40 நாடாளுமன்ற தொகுதி மக்கள் மனநிலை என்ன? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு ? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதி மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகள் வெளியான நிலையில், மற்ற 15 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நீலகிரியில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு
அதிமுக கூட்டணி என 39 முதல் 45% பேரும்,
திமுக கூட்டணிக்கு என 45% முதல் 51% பேரும் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரியில் திமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 41 முதல் 47% பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 43 முதல் 49% பேரும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், விருதுநகரில் 17 முதல் 23% பேர்அமமுகவுக்கு வாக்களிப்போம் என்றும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 34 முதல் 40% பேரும், திமுக கூட்டணிக்கு என 36 முதல் 42%பேரும் தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் அமமுகவுக்கு எங்கள் வாக்கு என 6 முதல் 9% பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 34 முதல் 40% பேரும், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 49 முதல் 55% பேரும் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் தொகுதியில் அமமுகவுக்கு 15 முதல் 21% பேரும், அதிமுக கூட்டணிக்கு 35 முதல் 41% பேரும், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 38 முதல் 44% பேரும் தெரிவித்தனர்.

நாமக்கல் தொகுதியில்  6 முதல் 9% பேர் அமமுகவுக்கு வாக்களிப்போம் என்றும், 42 முதல் 48% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும், 43 முதல் 49% பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும் குறிப்பிட்டனர்.

கள்ளக்குறிச்சியில் அமமுகவுக்கு 5 முதல் 8% பேரும், அதிமுக கூட்டணிக்கு 38 முதல் 44% பேரும், திமுக கூட்டணிக்கு 46 முதல் 52% பேரும் வாக்களிப்போம் என்று கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் 15 முதல் 21% பேர் அமமுகவுக்கே எங்கள் வாக்கு என்றும், அதிமுக கூட்டணிக்கு என்று 36 முதல் 42% பேரும், திமுக கூட்டணிக்கு என 37 முதல் 43% பேரும் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரியில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு அதிமுக கூட்டணிக்கு என்று 41 முதல் 47% பேரும், திமுக கூட்டணிக்கு என்று 46 முதல் 52% பேரும் தெரிவித்தனர்.

ஈரோடு தொகுதியில் 41 முதல் 47% பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்றும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 44-50% பேரும் தெரிவித்தனர்.

கடலூரில் அமமுகவுக்கு எங்கள் வாக்கு என்று 5 முதல் 8% பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 36 முதல் 42% பேரும்,
திமுக கூட்டணிக்கு என்று 43 முதல் 49% பேரும் தெரிவித்தனர்.

தருமபுரியில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 43 முதல் 49% பேரும், திமுக கூட்டணிக்கு எங்கள் வாக்கு என்று 44 முதல் 50% பேரும் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் அமமுகவுக்கு வாக்களிப்போம் என்று 10 முதல் 16% பேரும், திமுக கூட்டணிக்கு என 37 முதல் 43% பேரும், அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என்று 38 முதல் 44% பேரும் தெரிவித்தனர்.

வடசென்னையில் உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு, 7 முதல் 10% பேரின் தேர்வு மய்யமாக இருக்கிறது. அமமுகவுக்கு 6% முதல் 9% பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 33 முதல் 39% பேரும், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 44 முதல் 50% பேரும் தெரிவித்தனர்.

வேலூரில் அதிமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என்பது 37 முதல் 43% பேரின் தேர்வாக இருந்தது. திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என 46 முதல் 52% பேர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்