பாமக பிரமுகர் கொலை வழக்கு விசாரணை : 10 பேர் சிறையில்... மேலும் 6 பேருக்கு வலை...

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாமக பிரமுகர் கொலை வழக்கு விசாரணை : 10 பேர் சிறையில்... மேலும் 6 பேருக்கு வலை...
x
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 10 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். மேலும் 6 பேரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மதமாற்றம் தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. இதையடுத்து, கும்பகோணத்தில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக, திருபுவனம் கடை வீதி, கீழ வீதி,  சன்னதி தெரு சந்திப்பு பகுதி உட்பட 10 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்