மார்ச் 13ல் ராகுல் தமிழகம் வருகை - கே.எஸ்.அழகிரி...

தேர்தல் பிரசாரத்துக்காக வரும் 13 ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளார் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக வரும் 13 ஆம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்  கூட்டம் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி,  காங்கிரஸ் கட்சியின் முதல் பிரசாரக் கூட்டம் என்பதுடன்,  கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் கூட்டம் என்பதால், அதை வெற்றிகரமாக நடத்த ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். பிரசாரம் நடைபெறும் இடம் குறித்து  நாளை அறிவிக்கப்படும் என்றும் அழகிரி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்