கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என்றும், அவரது எதிர்க் காலத்திற்கு உகந்ததாக இருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 2018-க்கான மேன்மை மற்றும் மதிப்புமிக்க கூட்டுறவு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்