கோடநாடு விவகாரம் : நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு...
கோடநாடு விவகாரம் தொடர்பாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்டம் கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோடநாடு விவகாரம் தொடர்பாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்டம் கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூஸ் சாமுவேல் உள்ளிட்ட 6 பேர் மீது மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் இந்த 6 பேர் செயல்படுவதாகவும், வழக்கு முடியும் வரை அவர்கள் இதுகுறித்து பேச தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
Next Story