"விவசாயத்தை விட்டு விடுங்கள்" - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

பருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
x
சிவகங்கை மாவட்டம் தமறாக்கி அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மழலையருக்கான எல்.கே.ஜி. வகுப்பை கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் தெரிவித்தார்.  சிவகங்கை மக்களுக்கு தொழில் வசதி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாஸ்கரன் அப்போது கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்