முதல்வர் ஹெலிகப்டரில் சென்றதால் தான் பிரதமரிடம் சேத விவரங்களை விரைவாக தர முடிந்தது - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதில்

முதலமைச்சர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததால் தான், உடனடியாக பிரதமரை சந்தித்து விளக்க முடிந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் முதலமைச்சர் ஆய்வு செய்ததால் தான், உடனடியாக பிரதமரை சந்தித்து விளக்க முடிந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த அடிப்படையில் நேற்றே மத்திய அரசு குழு ஒன்றையும் தமிழகத்துக்கு அனுப்புவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டதையும், இன்று அந்த குழு தமிழகத்தில் ஆய்வை தொடங்க உள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்