மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...

மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...
x
மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு தூங்கி வழிவதாகவும், எனவே அதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பொறுப்பை தட்டி கழித்து விட்டதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், திமுக தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்