"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்" - முதலமைச்சர் பழனிசாமி

திமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டதோ அதே அடிப்படையில் தான், தற்போதும் டெண்டர் விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி
x
காஞ்சிபுரத்தில் அண்ணாவின், பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர், தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், மின்வாரியத்தின் கடனை தமிழக அரசு படிப்படியாக அடைத்து வருவதாகவும் தெரிவித்தார். 

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில், டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெறவில்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான ஆட்சியில் சிங்கிள் கவரில் ஒரு டெண்டர் கூட விடப்படவில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்