"வாஜ்பாயின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்" - வெங்கையா நாயுடு

மறைந்த வாஜ்பாயின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு புகழாரம் சூட்டி உள்ளார்.
வாஜ்பாயின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் - வெங்கையா நாயுடு
x
வாஜ்பாய் உண்மையான இந்தியனாக வாழ்ந்தார். அவரது மனதில் உள்ளதை கூற அவர் ஒருபோதும் தயங்கியதில்லை, சுதந்திர இந்தியாவின் மிக பெரிய தலைவர் வாஜ்பாய், நவீன உலகின் அஜாதசத்ருவாக திகழ்ந்தவர்.கண்ணியம், ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர் வாஜ்பாய்.அவரது ஆளுமை,கடமையின் மீதான பக்தி, தலைமைப்பண்பு ஆகியவை நீண்ட காலத்திற்கு நினைவு கூறப்படும் என பதிவிட்டுள்ளார். வாஜ்பாய் ஆட்சியின்போது, இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களையும் சாதனைகளையும் வெங்கையா நாயுடு, தமது இரங்கல் செய்தியில் பட்டியலிட்டு உள்ளார்.

"வாஜ்பாய் தலைச் சிறந்த நாடாளுமன்றவாதி" - மன்மோகன் சிங் 



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைந்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தலைச்சிறந்த பேச்சாளர், அனைவரையும் தன்பால் ஈர்க்கக்கூடிய கவிஞர், விதிவிலக்கான பொது ஊழியர், தலைச் சிறந்த நாடாளுமன்றவாதி மற்றும் சிறப்பான பிரதமர் என்றும் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்