ஸ்டாலின் கூறுவதில் துளியும் உண்மை இல்லை - அமைச்சர் காமராஜ்
அரிசி உற்பத்தி குறித்து தவறான புள்ளி விபரமா?
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி உற்பத்தி குறித்து தமிழக அரசு தவறான புள்ளி விபரங்கள் கொடுத்துள்ளதாக ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு உண்மையில்லை என்றார்.
அரிசி உற்பத்தியில் சாதனை படைத்ததன் காரணமாகவே மத்திய அரசின் க்ரிஷி கர்மான் விருதை தமிழக அரசு பெற்றதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
Next Story