பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் நிதியுதவி

பிரதமரின் கொரோன ​நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் நிதியுதவி
x
பிரதமரின் கொரோன ​நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்களின் 2 நாள் ஊதியம் உள்பட 100 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இஃப்கோ நிறுவனம் ரூ.25 கோடி ​நிதியுதவி : 


பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு இஃப்கோ நிறுவனம் 25 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, கிராமங்களில் தேவையான உதவிகளை செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல் அண்ட் டி நிறுவனம் ரூ.150 கோடி நிதியுதவி


பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் நிதியை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் எல். அண்ட் டி நிறுவனம் 150 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்